Articles (Page 2)

Articles (Page 2)

திருச்சிராப்பள்ளியில் 1982 ஜனவரி 16 இல் அன்றைய தமிழக முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இந்த நூல் இதுவரை ஆறு பதிப்புக்களைக் கண்டுள்ளதோடு, ஐந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளது.

கண்ணதாசனின் “இறவாக் காவியம்”
இயேசு காவியத்தின் தொடக்கத்தில் “என்னுரை” என்ற தலைப்பில் கண்ணதாசன் தாம் பாடிய காவியத்தை எவ்வாறு பார்த்தார் என்பதைக் குறிப்பிடுகிறார்:

“ பல சமயங்களில், பலர் என்னை இறவாக் காவியம் ஒன்று எழுதுங்கள் என்று வற்புறுத்தியதுண்டு. அந்த இறவாக் காவியம் ‘இயேசு காவியம்’தான் என்று நான் உறுதியாகக் கூறமுடியும்.