Articles (Page 3)

Articles (Page 3)

இயேசு காவியத்தின் பாகங்கள்
இயேசு காவியம் ஐந்து பாகங்களைக் கொண்டதாக உள்ளது. இயேசுவின் வாழ்வியலைப் பிறப்பு என்னும் தலைப்பில் முதல் பாகமும், யோவானிடம் இயேசு திருமுழுக்குப் பெற்றுத் தம்மைத் தயார்படுத்திய நிலை இரண்டாம் பாகமாகவும், இயேசு பொதுவாழ்வில் ஈடுபட்டமை மூன்றாம் பாகமாகவும், அவர் அடைந்த மகிமை ஐந்தாம் பாகமாகவும் பாடப்பட்டுள்ளன.

அவையடக்கம்
இயேசு காவியத்தின் காப்பியத் தலைவன் இயேசுவே என்பது நூல் பெயரிலிருந்தே விளங்கும். பெருங்காப்பியங்களின் மரபைப் பின்பற்றி கண்ணதாசனும் பல இடங்களில் பாடுகிறார். நூலின் பாயிரத்தை எடுத்துக்கொண்டால், ஆங்கு கம்பன் கவிதையின் கலையும், வீரமாமுனிவரின் விழுமிய சொல் நயமும் விளங்குவதைக் காணலாம்.